/* */

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார்.

HIGHLIGHTS

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி
X

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் எ.வ வேலு வழங்கி ஆறுதல் கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம். சு, கம்பம்பட்டு கிராமத்ததை சேர்ந்த மாபுகான் என்பவரின் மகள்கள் நஸ்ரின் (வயது 14). நசீமா (வயது 14) மற்றும் ஷாகிரா (வயது 12) ஆகியோர் சு கம்பம்பட்டு ஏரிநீரில் எதிர்பாராதவிதாமக மூழ்கி இறந்துவிட்டனர்.

மேற்படி இறந்துவிட்ட நபர்களின் தந்தை மாபுகானுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நிதியிலிருந்து உடனடி நிவாரண நிதியாக தலா ரூ.. 50,000/-வீதம் இறந்த மூன்று மகள்களுக்கு ரூ.1,50,000/- திற்கான காசோலையினை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று வழங்கி ஆறுதல் கூறினார் .

மேலும், இத்துயர நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிக் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்படி குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் விரைவில் நிறைவேற்றிதரப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிகழ்வின் போது சட்டமன்ற பேரவைதுணைத் தலைவர் கு, பிச்சாண்டி, ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ. வெற்றிவேல், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Jan 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...