/* */

சிதைந்த நிலையில் ஆண் சடலம்

கலசபாக்கம், மலையடிவாரத்தில் மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம்

HIGHLIGHTS

சிதைந்த நிலையில் ஆண் சடலம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேலரணி கீழ்தாங்கள் சாலை அருகில் உள்ள மலையோரத்தில் தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

அப்பகுதி வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இது கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று காலை இறந்த பிரகாஷின் உறவினர்கள், தங்களுக்கு சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரையில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி போளூர் செங்கம் சாலையில் வில்வாரணி அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On: 16 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா