Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.