/* */

இன்ஸ்டாகிராமில் 3நாள் பழகி மாணவியை கடத்திய வாலிபர்..கைது

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராமில்  3நாள் பழகி மாணவியை கடத்திய வாலிபர்..கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரியின் மகளுக்கு 17 வயதாகிறது. அவர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 22-ந்தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை செய்யாறு போலீசில் புகார் செய்தார். புகாரில், 3 நாட்களாக அறிமுகமில்லாத வாலிபர் ஒருவர் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் எனது மகளிடம் பேசி வந்தார், அந்த நபரிடம் இனிமேல் பழகக்கூடாது என அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. அந்த வாலிபர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். பின்பு செய்யாறு போலீசார் அந்தப் பள்ளி மாணவியை அவரிடமிருந்து மீட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Updated On: 27 March 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...