இன்ஸ்டாகிராமில் 3நாள் பழகி மாணவியை கடத்திய வாலிபர்..கைது

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இன்ஸ்டாகிராமில்  3நாள் பழகி மாணவியை கடத்திய வாலிபர்..கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரியின் மகளுக்கு 17 வயதாகிறது. அவர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 22-ந்தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை செய்யாறு போலீசில் புகார் செய்தார். புகாரில், 3 நாட்களாக அறிமுகமில்லாத வாலிபர் ஒருவர் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் எனது மகளிடம் பேசி வந்தார், அந்த நபரிடம் இனிமேல் பழகக்கூடாது என அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. அந்த வாலிபர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். பின்பு செய்யாறு போலீசார் அந்தப் பள்ளி மாணவியை அவரிடமிருந்து மீட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Updated On: 27 March 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்