ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
X

ஆரணி அருகே நடந்த மனு நீதி நாள்  முகாமில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் முன்பாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிப்காட்) நாராயணன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் எம்.பழனி, துணைத்தலைவர் புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் க.பெருமாள் வரவேற்றார். முகாமில் 82 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. செயலாளர் தட்சிணாமூர்த்தி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, வட்ட வழங்கல் அலுவலர் லலிதா உள்பட ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம் நன்றி கூறினார்.

தூசி அருகே உள்ள மேனலூர், பூனைதாங்கள், பல்லாவரம் மற்றும் கனிகிலுப்பை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் மேனலூர் கிராமத்தில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் த.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் 145 மனுக்கள் பெறப்பட்டு, 133 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உடனடியான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் காயத்ரி சுதர்சனம், வெம்பாக்கம் வட்டாட்சியர் சத்யன், வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 April 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்