செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று வெம்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை
X

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழுத் தலைவர் மாமண்டூர் டி.ராஜி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன், ஏ.கோபாலகிருஷ்ணன், என்ஜினீயர் ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், 'ஒன்றியத்திற்காக ஒதுக்கப்படும் பொது நிதியில் இருந்து எந்தவித வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளாமல் மொத்த பணத்தையும் டெங்கு காய்ச்சல் காரணம் காட்டி செலவிடுவது எந்தவிதத்தில் நியாயம். மஸ்தூர் பணியாளர்கள் கிராமங்களில் பணியாற்றினால் கிராம பஞ்சாயத்து நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும்.

இனிமேல் ஒரு ரூபாய் கூட டெங்கு பணி என்று கூறி பொது நிதியில் இருந்து பணம் எடுக்கக்கூடாது. கிராம சபை கூட்டங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை அழைப்பதில்லை. பஞ்சாயத்துகளில் பசுமை வீடு வழங்குவதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போது ஒன்றிய கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. 100 நாள் திட்டப்பணிகளின் வேலை நேரத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

Updated On: 10 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
  2. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  3. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  6. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  7. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  8. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  9. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  10. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்