/* */

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் வாகனம் மோதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்  வாகனம் மோதி உயிரிழப்பு
X

விஜய சாரதி

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய சாரதி (வயது 37). இவர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொகுப்பு ஊதிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் திருவண்ணாமலையில் உள்ள அலுவலகத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் நேற்று காலை பைக்கை அப்துல்லாபுரம் கூட்டு சாலை அருகே விட்டு விட்டு பஸ்சில் திருவண்ணாமலைக்கு சென்று இரவு அப்துல்லா புரம் கூட்டு சாலையில் இறங்கி பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அப்துல்லாபுரம் மின்வாரியம் அலுவலகம் எதிரே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது,

இதில் விஜயசாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து இவருடைய மனைவி தூசி போலீசில் கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் முரளிதரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 July 2022 2:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  2. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  3. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  4. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  5. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  6. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  7. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  8. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...