/* */

செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

HIGHLIGHTS

செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள செய்யாற்றை வென்றான் பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகள் வளர்மதி(19). இவர் செய்யாறில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வளர்மதிக்கு, அதே பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வளர்மதியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் வளர்மதி குடும்பத்தினருக்கும், விநாயகம் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், வளர்மதியை, விநாயகத்தின் மனைவி புனிதா கிராமத்தினர் முன்னிலையில் செருப்பால் அடித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வளர்மதி தனது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் அனக்காவூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார், விநாயகம் மற்றும் அவரது மனைவி புனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி