Begin typing your search above and press return to search.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டார கல்வி அலுவலகம் எதிரே வட்டார தலைவர் குமரேசன் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.