நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

செய்யாறு தொகுதியில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை
X

நெல் தூற்றும் எந்திரத்திற்கு பூஜை செய்த விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து பாராசூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் தூற்றும் எந்திரத்திற்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெல் விளைச்சல் மூலம் சுமார் 3 லட்சம் வரை டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் மூலம் 90 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் டெல்டா மாவட்டத்தில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் உள்ளது போல நெல் உற்பத்தி மற்றும் அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், மாவட்டத்திலேயே நெல் விளைச்சலில் முதலிடத்தில் உள்ள செய்யாறு தொகுதியில் மட்டும் (செய்யாறு - வெம்பாக்கம் வட்டங்கள்) வரும் சம்பா பருவத்தில் குறைந்த பட்சம் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், சம்பா பருவத்தில் அரசு நேரடி கொள்முதல் தொடர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில் மேட்டூர் மண்ணு, அகத்தேரிப்பட்டு கிருஷ்ணன், மைனர்.சக்கரபாணி, மதுரை குணசேகரன், பெருங்களத்தூர் ரகுபதி நாயுடு மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்