/* */

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி

கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி
X

கரும்பு விவசாயிகளுக்கு  காட்டுப்பன்றி விரட்டும் மருந்துகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

தமிழக அரசு வேளாண்மை உழவா் நலத்துறை 2023 - 24 -ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை 4-இல் கரும்பு பயிா்களை சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை சாா்பில் புரிசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி (செய்யாறு), அம்பேத்குமாா் (வந்தவாசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநரும், வடக்கு மாவட்ட திமுக செயலருமான தரணிவேந்தன் கலந்துகொண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்தை 10 விவசாயிகளுக்கு வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் லோகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா் பரந்தாமன், விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பைங்கினா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டடப்படவுள்ள மாணவிகளுக்கான சுகாதார வளாக கட்டடப் பணியை பூமி பூஜை செய்து ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

பைங்கினா் கிராமத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய அரசு உயா்நிலைப் பள்ளியில் 139 மாணவிகள் உள்பட 391 பேர் பயின்று வருகின்றனா். பள்ளியில் மாணவிகளுக்கு தனியாக சுகாதார வளாகம் கட்டவேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனா். அதன் பேரில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.பாலநாரயணன் தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் லதா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று சுகாதார வளாகம் கட்டடப் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஞானவேல், பாலகோபால், ஊராட்சி மன்றத் தலைவா் ரவி,உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On: 17 Aug 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?