/* */

நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி: விஷ்ணுபிரசாத் எம்பி ஆய்வு

நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி: விஷ்ணுபிரசாத் எம்பி ஆய்வு
X

நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்

நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி குறித்து செய்யாற்றில் விஷ்ணுபிரசாத் எம்பி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நகரி - திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நில ஆர்ஜிதம் செய்வதாக கூறி வருவாய்த்துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர். கிடப்பில் உள்ள திட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்காக ஆய்வு செய்து வருகிறேன்.

33 கிராமங்களில் 494 ஏக்கர் நிலப்பரப்பை ஆர்ஜிதம் செய்தால்தான் புதிய ரயில் பாதை திட்டம் உருவாகும். இதுவரை 150 ஏக்கருக்கு கிராம மக்களிடம் பேசி அவர்களுடைய நிலங்களை கையகப்படுத்துவதற்கான சம்மதம் பெற்று அதற்கான வேலைகளை செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளை நியமித்து நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்க உறுதி அளித்துள்ளார். இத்திட்டத்திற்கு தேவையான மீதம் உள்ள நிலங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுவதுமாக நில ஆர்ஜிதம் செய்து புதிய ரயில் பாதை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ரயில்பாதை திட்டத்தால் விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்கள் பயன்பெறும் என்றார்.

முன்னதாக செய்யாற்றில் செயல்பட்டுவரும் நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் நில ஆர்ஜித பணிகள் குறித்து விஷ்ணு பிரசாத் எம் பி கேட்டறிந்தார்

Updated On: 23 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா