/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள்  சேதம்
X

மரம் விழுந்ததால் சேதம் அடைந்த கார்.

மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு ,வெம்பாக்கம் ,வந்தவாசி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மழையால் வட இலுப்பை , நெமிலி உள்ளிட்ட பல கிராமங்களில் 32 கூரை வீடுகள் உள்பட 55 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வீடுகள் சேதம் குறித்து கிராமப்புறங்களில் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை ,மின் துறை பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

பையூர் கிராமத்தில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன அரசு மகளிர் விடுதி அருகே மரம் வேரோடு சாய்ந்தது.

செய்யாறு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெம்பாக்கம் வட்டம் செய்யனுர் கிராமத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும், பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த 50 பேர் அந்த பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ஆரம்பப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 பழங்குடி சமூகத்தை சேர்ந்த 50 பேருக்கு செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

வந்தவாசி பகுதியில் செந்நாவரம் கிராமத்தில் அதிகாலை மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததில் ஒரு கடை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.

வந்தவாசி பகுதியில் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. தாழ்வான பகுதியில் வசித்த 64 பேர் பள்ளி சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 11 Dec 2022 1:35 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...