/* */

செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்தபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபப்பு

HIGHLIGHTS

செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள்  போராட்டம்
X

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வவூர்பேட்டை பகுதியில் பட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த செங்குந்தர் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

கோவிலுக்கு சொந்தமான 3.12 ஏக்கர் நிலம் வைத்தியர் தெருவில் உள்ளது. அந்த இடத்தில் வெங்கட்ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் செங்குந்தர் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் டிஎஸ்பிக்கள் செந்தில், விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நீதிமன்ற ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தி, அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற ஊழியர்கள் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்படுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Updated On: 20 April 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி