செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்தபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபப்பு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள்  போராட்டம்
X

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வவூர்பேட்டை பகுதியில் பட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த செங்குந்தர் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

கோவிலுக்கு சொந்தமான 3.12 ஏக்கர் நிலம் வைத்தியர் தெருவில் உள்ளது. அந்த இடத்தில் வெங்கட்ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் செங்குந்தர் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் டிஎஸ்பிக்கள் செந்தில், விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நீதிமன்ற ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தி, அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற ஊழியர்கள் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்படுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Updated On: 20 April 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  4. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  5. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  6. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  7. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  8. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  9. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
  10. சினிமா
    Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...