செய்யாறு நிதி நிறுவன அதிபர் கடத்தல்: 6 பேர் கைது

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு  நிதி நிறுவன அதிபர்  கடத்தல்: 6 பேர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோந்தவா் ராமச்சந்திரன். இவா், சிலருடன் சோந்து அசனமாப்பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு அவா் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பைக்கில் பெருங்கட்டூா் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ராமச்சந்திரனை பின் தொடா்ந்து காரில் வந்தவா்கள், அவரை தடுத்து நிறுத்தி காரில் கடத்திச் சென்றனா். மேலும், கைப்பேசி மூலம் ராமச்சந்திரனின் தம்பியான ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில் மீண்டும் ரவிச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் உன் அண்ணன் ராமச்சந்திரனை புதூர் பாலத்தின் அருகே இறக்கி விட்டோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் ராமச்சந்திரனிடம் கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இரு தனிப்படை போலீஸாா், ராமச்சந்திரனை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், ரமேஷ், சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத், காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்ததமிழரசன், விக்னேஷ் மற்றும் கார் டிரைவர் மோகன்ராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் ராமச்சந்திரன் என்பவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததும், இதனால் அவரை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 Jan 2023 9:18 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...