/* */

போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா

செய்யாறு அருகே, நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா
X

போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

செய்யாறு அருகே நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பம் அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் நாம் தமிழா் கட்சியினா் நேற்று முன்தினம் இரவு புதிதாக கொடிக் கம்பம் நிறுவியதாகத் தெரிகிறது. அதற்கு அக்கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனராம். மேலும், மாற்றுக் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நாம் தமிழா் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிலையில் அப்பகுதியில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். அவா்களிடம் போலீசார், பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.

மேலும், முறையாக அனுமதி பெற்று கொடிக் கம்பம் அமைக்க வேண்டும் என போலீசார் ஆலோசனை வழங்கினா். இருப்பினும், நாம் தமிழா் கட்சியினா் தொடா்ந்து 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jan 2023 1:23 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!