டிரைவர் இல்லாமல் நிற்கும் பறக்கும் படை வாகனங்கள்

செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் 3வது நாளாக ரோந்து பணியில் ஈடுபாடாமல் தாலுக்கா அலுவலகத்திலேயே வாகனங்கள் நிறுத்திவைப்பு.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டிரைவர் இல்லாமல் நிற்கும் பறக்கும் படை வாகனங்கள்
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பறக்கும்படை வாகனங்கள் மூன்றாவது நாளாக தாலுக்கா அலுவலக வாளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக பறக்கும்படை குழுக்கள் மூன்றும், நிலை கண்காணிப்பு குழுக்கள் மூன்று என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அதிகாரி, ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராப்பர் என நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 3 சிப்டுகளாக பிரித்து சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட, பறக்கும் படை குழு வாகனத்தின் டிரைவர் பணிக்கு வராததால் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓட்டுனர்கள் வராததால் தாலுக்கா அலுவலக வளாகத்திலேயே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோந்து பணிக்கு வந்த போலீசார், அதிகாரிகள் மற்றும் வீடியோ கிராபர்கள் தாலுகா அலுவலகத்திலேயே காத்துக் கிடந்தனர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Updated On: 15 March 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
  2. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  3. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  6. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  7. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  8. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  9. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  10. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்