/* */

டிரைவர் இல்லாமல் நிற்கும் பறக்கும் படை வாகனங்கள்

செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் 3வது நாளாக ரோந்து பணியில் ஈடுபாடாமல் தாலுக்கா அலுவலகத்திலேயே வாகனங்கள் நிறுத்திவைப்பு.

HIGHLIGHTS

டிரைவர் இல்லாமல் நிற்கும் பறக்கும் படை வாகனங்கள்
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பறக்கும்படை வாகனங்கள் மூன்றாவது நாளாக தாலுக்கா அலுவலக வாளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக பறக்கும்படை குழுக்கள் மூன்றும், நிலை கண்காணிப்பு குழுக்கள் மூன்று என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அதிகாரி, ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராப்பர் என நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 3 சிப்டுகளாக பிரித்து சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட, பறக்கும் படை குழு வாகனத்தின் டிரைவர் பணிக்கு வராததால் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓட்டுனர்கள் வராததால் தாலுக்கா அலுவலக வளாகத்திலேயே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோந்து பணிக்கு வந்த போலீசார், அதிகாரிகள் மற்றும் வீடியோ கிராபர்கள் தாலுகா அலுவலகத்திலேயே காத்துக் கிடந்தனர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Updated On: 15 March 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!