/* */

வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை

செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

HIGHLIGHTS

வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா். இதுகுறித்து வாக்கடை கிராமத்தில் கட்சி சாா்பற்ற உழுவா் பேரவையின் மாநில செய்தித் தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், விவசாயிகள் மண்ணு, பழனி, கிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் பெருமாள், துணைத் தலைவா் காா்த்தி ஆகியோா் கூறியதாவது:

தற்போதைய சொணவாரிப் பட்டத்தையொட்டி, 300 ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் என்ற அளவிலேயே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வாக்கடை ஏரிப் பாசனத்தின் மூலம் வாக்கடை, கழனிப்பாக்கம், நாவல், முக்கூா், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த சுமாா் 80 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வசதியாக வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விட்டுத்தனர்.

Updated On: 16 Aug 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை