Begin typing your search above and press return to search.
வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
HIGHLIGHTS
வெம்பாக்கம் தாலுகா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய நபரை, சடலமாக மீட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.