தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் அணைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக செண்பகத்தோப்பு அணை நிரம்பியது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் அணைகள்
X

பைல் படம்.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த காரணமாக படவேடு செண்பகத்தோப்பு அணையின் கொள்ளளவு தற்போது 54 அடியை எட்டியுள்ளது. இன்று காலை அணையில் இருந்து சுமார் ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கமண்டல நதியின் ஓரமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் வருவாய்த் துறை சார்பில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான படவேடு கண்ணமங்கலம் இரும்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

ஜவ்வாது மலை அடிவாரத்தில் அதிகபட்சமாக பத்து சென்டிமீட்டர் மழை நேற்று பதிவாகியுள்ளது. இதனால் அமிர்தி, காட்டாறு, காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி கால்வாயில் மழை வெள்ளம் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குன்னத்துர் கீழ்நகர் குண்டம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியதால் ஆரணியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றில் மழை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளன. கோடை காலத்தில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 18 May 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
  2. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  3. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  6. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  7. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  8. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  9. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  10. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்