/* */

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் ரூபாய் 4 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
X

திருவத்திபுரம் சந்தைமேடு பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்க்காக பூமி பூஜை நடைபெற்ற காட்சி.

கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவத்திபுரம் நகராட்சியில் சந்தைமேடு பகுதியில் ரூபாய் 4.44 கோடி செலவில் 132 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் , நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் ஆகியோர் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டட பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா