/* */

காதை பாதிக்கும் ஒலி சாதனம்: இளமையிலேயே கேட்கும் திறன் குறையும்

செய்யாறு மருத்துவமனையில் உலக காது கேட்கும் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..!

HIGHLIGHTS

காதை பாதிக்கும் ஒலி சாதனம்: இளமையிலேயே கேட்கும் திறன் குறையும்
X

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் யோகேஸ்வரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுகாதார வட்டம் நாட்டேரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக காது கேட்கும் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மருத்துவர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் பொழுதுபோக்கிற்காக ஒலி சாதனங்களில் இருந்து அதிக ஒலியை நீண்ட நேரம் கேட்பதால் காதில் உள்ள நரம்புகள் இளமையிலேயே பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது.

அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும், தொடர்ந்து அதிக ஒலி கேட்கும் அரங்குக்குள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சற்று நேரம் அமைதியான இடத்திற்கு சென்று செவிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். எனக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 March 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு