செய்யாறு அருகே அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி

செய்யாறு அருகே குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள், ஏரியில் மூழ்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அருகே அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி; கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வரதராஜ் (வயது 12), வருண்குமார் (10). வரதராஜ், பாப்பாந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பும், வருண்குமார் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சுதாகர் (7). அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் வரதராஜ், வருண்குமார், சுதாகர் ஆகிய 3 சிறுவர்களும் பாப்பாந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.

ஏரியின் ஒரு பகுதியில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது, 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். நீச்சல் தெரியாததால், அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

நீரில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் உடலை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி 3 பேர் இறந்தத சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Oct 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  2. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  5. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  6. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  7. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  8. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  9. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  10. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!