தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்
X

விபத்துக்குள்ளான ஆட்டோ.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா வயலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 12 பெண்கள் சிப்காட் தொழிற்சாலை ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை 8 மணி அளவில் வழக்கம்போல ஆட்டோவில் வேலைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் புருஷோத்தமன் ஓட்டிச் சென்றார்.

தூசி அருகே பாவூர் சோதியம்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே கல்குவாரியில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி, ஆட்டோ மீது உரசுவது போல் வந்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ அங்குள்ள கோழிப்பண்ணையில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் புருஷோத்தமன் மற்றும் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 30 April 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...