/* */

செங்கம் அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

செங்கம் அருகே பால் லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

செங்கம் அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வந்தாராவல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி அவரஞ்சி. தம்பதிகளுக்கு பழனி என்ற மகன் உள்ளார். இவர்களது உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் இவர்கள் அனைவரும் திருக்கோவிலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். கார் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது.

பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டுக்கு பால் ஏற்றி செல்வதற்காக லாரி தண்டம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னப்பையன் மற்றும் அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த அவரது மகன் பழனி மற்றும் உறவினர்கள் தங்கவேலு மகாலிங்கம் ஆகிய 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Aug 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  3. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  4. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  5. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?