/* */

தண்டராம்பட்டு அருகே ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தண்டராம்பட்டு அருகே, கடன் தொல்லையால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தண்டராம்பட்டு அருகே ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X

கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அப்துல் சுக்கூர்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அருகே உள்ள திருவடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சுக்கூர் (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஷீபா (22), மருவா (20) என 2 மகள்களும், அர்பாத் (17) என்ற மகனும் உள்ளனர். அப்துல்சுக்கூர் வியாபாரத்திற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அப்துல்சுக்கூர், நேற்று இரவு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  4. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  5. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  7. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  8. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  9. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்கிறார்கள்..?