/* */

செங்கம் கல்வி பள்ளி வட்டத்தில் மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்.

செங்கம் கல்வி வட்டத்தில் பனைஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கம் கல்வி  பள்ளி  வட்டத்தில் மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்.
X

பனைஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இக்குழுவில் பெற்றோர்கள் 15 பேர் ஆசிரியர்கள் இரண்டு பேர் உள்ளாட்சி பிரதிநிதி உள்ளிட்ட 20 பேர் இடம்பெறுவர்.

இக்குழுவினர் பள்ளி மாணவர்களின் தேவைகள் அடிப்படை வசதிகள் மற்றும் இதர தேவைகள் குறித்து ஆலோசித்து நிவர்த்தி செய்வார்கள் மாநிலம் முழுவதும் இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வி வட்டத்தில் பனைஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் , முருகன் தலைமை தாங்கினார்

ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் தரம் உயர்த்துதல் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 12:36 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு