7 மாதத்திற்கு பின் சாத்தனூர் அணை திறப்பு
கொரோனா தொற்று குறைவு காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏழு மாதங்களுக்குப் பிறகு சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் பூங்காக்கள் அணைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தி அரசு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்ட அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது என அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடந்த 7 மாதங்களாக தடைசெய்யப்பட்டிருந்த சாத்தனுர் அணை திறக்கப்பட்ட செய்தி அறிந்த சுற்றுலாப் பயணிகள் சாத்தனூர் அணைக்கு வந்து குவிந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக சாத்தனூர் அணைக்கு வந்தது தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அரசு மேலும் பல தகவல்களை அறிவிக்க வேண்டும் எனவும் இந்த சாத்தனூர் அணையை மீண்டும் நன்கு பராமரித்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.