/* */

பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்ற வாலிபருக்கு தர்ம அடி

பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்ற வாலிபருக்கு தர்ம அடி
X

திருவண்ணாமலை டி.எஸ்.பி அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் தொண்டமானூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அங்குள்ள விவசாய நிலம் வழியாக தனியாக நடந்துவந்த அவரை, வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் எதிர்பார்க்காத நேரத்தில் வாயில் துணியை அமுக்கி அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு அந்த வாலிபர் தூக்கி சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது அவரது பிடியில் இருந்த தப்பிய அந்த பெண், வாயில் இருந்த துணியை எடுத்து கூச்சலிட்டு உள்ளார்

இந்த சத்தம் கேட்டு கரும்பு தோட்டத்திற்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள், வாலிபரின் பிடியிலிருந்து பெண்ணை மீட்டு, வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாலியல் வன்கொடுமை முயற்சியால் காயமடைந்த இளம்பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை அறிந்த திருவண்ணாமலை டி.எஸ்.பி அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தனியாக வந்த பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 24 Feb 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!