Begin typing your search above and press return to search.
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்- 15 பயணிகள் காயம்
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.
HIGHLIGHTS
பெங்களுரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று காலை 55 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது செங்கம் வனத்துறை அலுவலகம் அருகே வந்துபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 5 பேரை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சம்பவஇடத்திற்கு வந்த செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.