/* */

திருவண்ணாமலை : மின்வாரிய பணியாளர் தீக்குளிப்பு

மகளிர் போலீஸ் நிலையம் முன் மின்வாரிய பணியாளர் தீக்குளித்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை : மின்வாரிய பணியாளர் தீக்குளிப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்னம்பட்டு பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியிடம் அதே கிராமத்தை சேர்ந்த தாந்தோணி (வயது 28) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அந்த பணியாளர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் போலீசார், இன்ஸ்பெக்டர் சோனியா ரோந்து பணியில் சென்றுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெளியில் வந்த மின்வாரிய பணியாளர் திடீரென மகளிர் போலீஸ் நிலையம் முன்பாக உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார் விரைந்து வந்து அருகில் இருந்த மணலை அவரது உடல் மீது வீசி தீயினை அணைத்துள்ளனர்.

பின்னர் அவரை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்யாறு அருகே டயர் வெடித்து கார் மரத்தில் மோதிய விபத்தில் பெங்களூரு வியாபாரி பலி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவரின் மகன் அகரம் அகமத் (வயது 24), கோரப்பட்டு நூல் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஒண்ணுபுரம், சேவூர் பகுதியில் உள்ள பட்டு சேலை உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டு நூல் வழங்குவதற்காக நேற்று இரவு வந்தார். இன்று காலை சேவூர் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளுக்கு பட்டு கோரா கொடுத்துவிட்டு ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளை சந்திப்பதற்காக அகரம் அகமத், டிரைவர் முத்தீஸ் பாஷா ஆகிய இருவரும் காரில் சென்றனர்.

இன்று காலை சேவூர் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளுக்கு பட்டு கோரா கொடுத்துவிட்டு ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளை சந்திப்பதற்காக அகரம் அகமத், டிரைவர் முத்தீஸ் பாஷா ஆகிய இருவரும் காரில் சென்றனர்.

ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் சோமந்தாங்கல் அருகே செல்லும்போது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முன் பகுதியில் அமர்ந்திருந்த அகரம் அகமத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் முத்தீஸ்பாஷாவுக்கு இருகால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் படுகாயம் அடைந்த முத்தீஸ் பாஷாவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சிசுந்தரம், ஜெயபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த அகரம் அகமத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 April 2023 9:54 AM GMT

Related News