விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உள்ளது. அதன் அருகில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கடையின் சுவரை உடைத்தது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளராக இருந்த பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வந்த அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே போலீசாரை அவதூறாக பேசியதாக மாவட்ட செயலாளராக இருந்த பாஸ்கரன் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 29). இவர், சாத்தனூரில் உள்ள மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பரானா (20).

இவர், திருவண்ணாமலை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் அங்கிருந்து சென்றனர்.

Updated On: 7 March 2023 2:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  2. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  3. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  4. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  5. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  6. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  8. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  9. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  10. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...