/* */

ஆரணி அருகே டிராக்டர் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு

ஆரணி அருகே பைக் மீது டிராக்டர் மோதி ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆரணி அருகே டிராக்டர் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை (வயது 52) என்பவர் பதவி வகித்து வந்தார்.

தி.மு.க. பிரமுகரான இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு முக்குரும்பை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது. இதில் அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Aug 2022 11:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்