/* */

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு

ஆரணி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு
X

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியர் கவிதா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கமண்டல நாக நதியில் இருந்து கனிகிலுப்பை கிராம ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. இக்கால்வாய், எஸ்வி நகரம் (ஆரணி - செய்யாறு சாலை) வழியாக செல்கிறது. இந்நிலையில், அக்கிராமத்தில் உள்ள கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தகர ஷீட் கொட்டகை அமைத்து கன்னியப்பன் என்பவர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் திமுக உறுப்பினர் ஆவார் . இதேபோல், தகர ஷீட் வீடு அமைத்து குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார்.

இது குறித்து, கால்வாய் புறம்போக்கு அருகே உள்ள காலி இடத்தின் உரிமையாளரான ஆரணி திருமலை நகரில் வசிக்கும் ஏழுமலை தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ல் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், வறுமையில் இருந்த குணசேகரனுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்திலேயே, கன்னியப்பன் மீண்டும் கொட்டகையை அமைத்துள்ளார். அந்த இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தையும் மாட்டி வைத்துள்ளார். ஆக்கிரமிப்பு குறித்து, கேள்வி எழுப்பிய ஏழுமலை உள்ளிட்டோர் மிரட்டப்பட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர். அதன்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், கால்வாய் புறம்போக்கு இடத்தை கன்னியப்பன் ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதியானது. அதன்பேரில் அந்த ஓலை கொட்டகை அகற்றப்பட்டது.

Updated On: 30 Jun 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  3. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  4. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  5. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  6. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  7. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...