/* */

ஆரணியில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை

ஆரணியில் வீடு புகுந்து தம்பதி மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆரணியில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை
X

ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு தமிழரசு, அன்பரசு, என்ற 2 மகன்கள் உள்ளனர். கஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப வறுமை காரணமாக ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

கஜேந்திரன் வீட்டுக்கு 4 பேர் கும்பல் வந்து கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர். தற்போது பணம் இல்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் கஜேந்திரன் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கஜேந்திரன் மற்றும் சாமுண்டீஸ்வரி தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 22 Jun 2022 1:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி...
  2. தமிழ்நாடு
    சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் விழா
  3. வேலைவாய்ப்பு
    ஆங்கிலம் இல்லாமல் அதிக சம்பளம் தரும் வேலைகள்
  4. வணிகம்
    50 பேர் சாப்பிடும் பெரிய ஆர்டர்..! இனி Zomato டெலிவரி செய்யும்..!
  5. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  6. நாமக்கல்
    சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள்...
  7. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  8. ஈரோடு
    மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!
  10. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?