Begin typing your search above and press return to search.
ஆரணி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு: போலீசார் விசாரணை
ஆரணி அருகே பூப்பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகைகளை பறித்தச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மனைவி கவுாி (வயது 65). இவர், வீட்டின் முன்பு உள்ள செடியில் பூக்களை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவுரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த கவுரிக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.