Begin typing your search above and press return to search.
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக புகார் வந்ததையடுத்து சேத்துப்பட்டு தாசில்தார் பூங்காவனம், மற்றும் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 6 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி கொண்டிருந்த 6 பேர் அதிகாரிகளை பார்த்ததும் வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.