/* */

ஆற்றுப்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

கண்ணமங்கலம் வெள்ளூர் ஆற்றுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

HIGHLIGHTS

ஆற்றுப்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான கார் மற்றும் மோட்டார் சைக்கிள்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 27), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கொடுக்கப்பட்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42) இவர்கள் இருவரும் வேலூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கமண்டல நதி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து வெள்ளூர் நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த பார்த்திபன், சிவக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 July 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?