/* */

அண்ணாமலையார் கோவிலில் ரஜினி: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

லால் சலாம் படப்பிடிப்பிற்கு திருவண்ணாமலை வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்'

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில் ரஜினி: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
X

அண்ணாமலையார் கோவிலில் ரஜினிகாந்த்

அருணாசலேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப் பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார். அதனை தொடர்ந்து ராஜ கோபுரங்கள் மீது அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் பொருத்த நிதி அளித்தார். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைகளிலும் நடிகர் ரஜினி கிரிவலம் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடந்து வருகிறது. லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்கியது. பின்னர் மும்பையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 8 ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. “மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்” என்ற கேப்ஷனில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரஜினி திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அம்மணி அம்மன் கோபுரம் முன்பு இறங்கியதும் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கினார். நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.


முதலில் அவர் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன. அதில் கலந்து கொண்டு மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு சென்று அங்கு தரிசனம் செய்தார்.

இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது. இதனால் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அம்மன் சன்னதி அருகே ரஜினிகாந்த் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அங்கிருந்து ரஜினி வெளியேறினார். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காரில் புறப்பட்டு சென்றார். சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நிறைவடைகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தெரிவித்தனர்

கடந்த சில தினங்களாகவே அவரைக் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இப்படியான நிலையில் ரஜினிகாந்த், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன் கோயிலில் வழிபாடு செய்துள்ளார்

Updated On: 1 July 2023 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!