/* */

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து 12 பேர் படுகாயம்

நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து   12 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான பேருந்து.

சிதம்பரத்திலிருந்து வேலூரை நோக்கி இரவு அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சே.வட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்துள்ளார் . வெறையூர் அருகே வந்தபோது, இயற்கை உபாதைக்காக பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் டிரைவரிடம் கூறியுள்ளனர் .

இதனால் அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு அருகே சாலை ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது கடலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் பேருந்தின் ஒரு பக்கம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், லாரி டிரைவருடன் சேர்த்து 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 12 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 July 2022 2:52 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்