/* */

திருத்தணி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

திருத்தணி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட லோகேஷ்.

திருத்தணி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரின் மகன் லோகேஷ் (வயது 25.) இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று எலக்ட்ரீஷியன் வேலை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியுடன் லோகேஷிற்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம், 23-ம் தேதி லோகேஷ், சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து சிறுமியை பாலியல் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் லோகேஷ் சிறுமியிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்து விட்டார்.

இதனையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமி கூறியதை தொடர்ந்து பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கார்த்திகா விசாரணை மேற்கொண்டு லோகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். பின்னர் போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 July 2023 9:02 AM GMT

Related News