Begin typing your search above and press return to search.
குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் நீரில் நனைந்து வீண்: உரிமையாளர்கள் புலம்பல்
பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் காவல் நிலையம் அருகே குட்டை தண்ணீரில் நனைந்து வீணாவதாக வாகன உரிமையாளர்கள் புலம்பல்
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்து, மணல் திருட்டு, குடித்து விட்டு வாகனம் இயக்கியது என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது
கொரோனாவுக்கு பின்னர் இதுவரை வாகனம் ஏலம் விடப்படாத நிலையில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட வாகனம் காவல் நிலையம் அருகே உள்ள குட்டையில் குப்பை போல் தேங்கியுள்ளதால் வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வழக்கு முடியும் வரை இவ்வாறு இருந்தால் வாகனம் முழுவதும் சேதமடைந்து பயனற்று போகும் என புலம்பி வருகின்றனர்