/* */

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா!

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா!
X

1001 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதி, திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா ஆர்.கே. பேட்டையில் இன்று நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஆர்.கிரன் குமார் முன்னிலையில் ஆர்.கே.பேட்டை ஒன்றிய தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டமாக ஆர்.கே. பேட்டையில் 1001 மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் கிரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகள் மகேஷ்குமார், ஜெயேந்திரன், தமிழரசன், சதீஷ்குமார் ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் ரஞ்சித்குமார், சண்முக பாண்டியன், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?