/* */

திருத்தணி தணிகை புதுமை மாதா ஆடம்பர தேர் திருவிழா

திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏசுநாதர், தணிகை மேரி மாதா வாகனத்தில் தேர்பவனி வந்தனர்

HIGHLIGHTS

திருத்தணி தணிகை புதுமை மாதா  ஆடம்பர தேர் திருவிழா
X

 திருத்தணி அமிர்தாபுரத்தில் உள்ளது தணிகை புதுமை மாதா  திருத்தலத்தின் 51வது ஆண்டு பெருவிழா நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அமிர்தாபுரத்தில் உள்ளது தணிகை புதுமை மாதா திருத்தலம். இந்த திருத்தலத்தின் 51வது ஆண்டு பெருவிழா கடந்த 29ல் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் ஜபமாலை, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏசுநாதர், தணிகை மேரி மாதா வாகனத்தில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் எழுந்தருளி தேர் பவனி நடைபெற்றது. ரயில் நிலையம் சந்திப்பு பகுதியிலிருந்து தொடங்கி மா.பொ.சி சாலை, பஜார் வீதி, சித்தூர் சாலை வழியாக தேர் பவனி நடைபெற்று தணிகை புதுமை மாதா திருத்தல் சென்றடைந்தது. தேர் பவனியில் ஆயர்கள், மத போதகர்கள், கிறிஸ்தவர்கள் மேரி மாதா பாடல்கள் பாடிக்கொண்டு மேள தாளங்கள் முழங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

Updated On: 10 Sep 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  9. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  10. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...