/* */

திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
X

வயிற்றில் கத்தரிகோல் வைத்து அறுவை செய்யப்பட்ட பெண்.

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அவ்வபோது கத்தரிக்கோலை வயிற்றின் உள்ளே வைத்து அறுவை சிகிச்சை செய்து முடித்து விடும் சம்பவம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது கத்திரிக்கோலை உள்ளே வைத்து தைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு வயிற்றில் அடிக்கடி வலி எடுத்ததால் இதுபற்றி பரிசோதனை செய்து பார்த்தபோது இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது.

மருத்துவர்களின் ரிப்போர்ட்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை பணிகள் துறை இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு புதுப்பித்துள்ளது.

Updated On: 9 Jun 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா