/* */

டூவீலரில் 400 மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் திருத்தணியில் கைது!

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு இருசக்கர வாகனத்தில் 400 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் திருத்தணியில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

டூவீலரில் 400 மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் திருத்தணியில் கைது!
X

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம், 10ம் தேதி முதல் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திருவள்ளூர் மாவட்ட திருத்தணி எல்லைப் பகுதிகளில் உள்ள ஆந்திர மாநில டாஸ்மாக் கடைகளில் தமிழக குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்னை பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம்–திருவாலங்காடு கூட்டுச்சாலையில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ. முருகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் இருவர் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்ததனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, நகரியில் இருந்து மாங்காய் மூட்டை எடுத்து வருகிறோம் என போலீசாரிடம் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்த போது, 400 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயரங்கன், வடபழனியை சேர்ந்த. கிஷோர்குமார் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்