/* */

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மையார் குப்பத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை மடக்கி சோதனை சோதனை செய்ததில். அதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து. ரேசன் அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுனர் பள்ளிப்பட்டு அடுத்த பூச்சாலியூர், மாங்காளிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி திருத்தணி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 8 April 2022 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்