ஆர்.கே. பேட்டை ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதம்
திருவள்ளூவர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செ.செ.சேகர், ராஜேந்திர பாபு ஆகியோர் வரவேற்றனர். இக்கூட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் சமீபத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவராக வெற்றி பெற்ற திலகவதி ரமேசுக்கு ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
மேலும் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் சாலை, கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தேர்வு குறித்து விவாதம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. பி. சந்திரன், கல்விக்கரசி சேகர், கோவிந்தம்மாள் ஆனந்தன், ஜி.டி.கார்த்திகேயன், பிரமிளா வெங்கடேசன், செல்வி சந்தோஷ்,, அம்மு சேகர், உமாபதி, நதியா திருஞானம், சிவகுமார், நரசிம்மன், ஜமுனா குமாரசாமி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் நன்றி கூறினார்