/* */

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

HIGHLIGHTS

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சிங்கராஜபுரம் கிராமத்தில் பகுதியில் வசித்து வருபவர் ஜீவானந்தம் மகன் தோனேஷ்வரன்(20), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருத்தணி பொன்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தில் தோனேஷ்வரன் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருத்தணி காவல் துறையினர், தோனீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்த விவகாரத்தில் அவரை யாராவது அடித்து கொலை செய்தாரா? அல்லது அவர் காதல் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 23 March 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  2. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  3. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  4. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  5. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  6. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  7. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  9. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  10. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை