திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, காங்கிரஸ் போராட்டம்!
ஒன்றிய குழு தலைவர் இருக்கை முன் அமர்ந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்
HIGHLIGHTS
அதிமுக ஒன்றிய குழுத் தலைவரின் நிர்வாக திறணற்ற செயல்பாடுகளால் வளர்ச்சி திட்டப் பணிகள் முடக்கம். திருத்தணி ஒன்றிய குழு தலைவர் இருக்கை முன் அமர்ந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அதிமுக ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் இரவி உட்பட உறுப்பினர்கள் 9 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட பொருள் மீது விவாதம் நடைபெற்றது. மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்மான புத்தகத்தில் வைட்னர் போட்டு அடிக்கப்பட்டு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாற்றம் செய்து மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக உறுப்பினர்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்ப்படுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பொது விவாதத்தில் ஒன்றிய குழுத் தலைவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் மற்றவர்களை பார்த்தபடி பொம்மை போல் மொளனமாக அமர்ந்திருந்ததால், ஆவேசமடைந்த திமுக காங்கிரஸ் கட்சிககளை சேர்ந்த ஐந்து பெண் உறுப்பினர்கள் ஒன்றிய குழுத் தலைவர் இருக்கை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஒன்றிய குழுத் தலைவரின் நிர்வாக திறனற்ற செயல்பாடுகளால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ள முடியாத நிலையில் எங்கள் பகுதி மக்களுக்கு பதில் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பதாக ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.